Sunday, October 9, 2022

Tr.M.ShakilaSalamath-Govt.Girls.Hr.Sec.School-Kovilpatti-Thoothukudi-dist



 அறிமுகம் 

 நான் மு.ஷகிலா சலாமத் B.lit, MA. Bed. நான் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு மகளிர்  மேல்நிலைப் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக  பணியாற்றுகிறேன். நான் 1999 ஆம் ஆண்டு அரசுப்பணியில் சேர்ந்தேன், நான்  என் வகுப்பறையை மிகவும்  சுவராஸ்யமாக கொண்டு செல்ல விரும்புவேன், ஆகையால் QR code, Videoக்களை பயன்படுத்துவேன். பொம்மைகள், படங்கள், Chart போன்ற வற்றையும் பயன்படுத்துவேன். . மாணவிகளுக்கு Project work கொடுத்து அவர்கள் அனைவரையும் ஓவியம் வரைய ஊக்குவிப்பேன்.


 கொரோனா காலகட்டத்தில் கிடைத்த வரப்பிரசாதம் . 

 எனக்கு பாடல், நடனம், ஓவியம், பேச்சு போன்றவற்றில் ஈடுபாடு அதிகம். அதே போல் என்னிடம் பயிலும் மாணவிகளும் நல்ல திறமைகள் பெறவேண்டும் என்று அலாதி பிரியம். 2019 ஏப்ரல் மாதத்தில் உருவான கொரோனா என்ற நோய் உலகையே உலுக்கி போட்டது. அந்த சமயத்தில் தம்பி திரு. கார்த்திக் ராஜா அவர்களால் அறிமுகம் செய்யபட்ட கல்வி ரேடியோ கொரோனா காலகட்டத்தின் ஒரு வரப்பிரசாதம் ஆகும். எனக்கு கிடைத்த நல் வாய்ப்பை  மாணவச் செல்வங்களுக்கு நல் வழியில் பயன்படுத்தினேன்.


 கல்வி ரேடியோவின் சிறப்பு 

 கல்வி ரேடியோவின் அறிமுகம் கிடைத்த போது. அதன் சிறப்பு அம்சங்களை எண்ணி பூரிப்படைந்தேன்.

 அவை சுருக்கமாக

* வாசித்தல் 

* வாக்கியங்களில் சொல்வதை எழுதுதல்.

* பாடல், கதை. 

*ஆடியோ லைப்ரரி.

* தினசரி செயல்பாடு.

*பழமொழிகள்.

*விடுகதைகள்.

*பாடங்கள், பயிற்சிகள்.

*வினா, விடைகள்.

ஆகா..... அனைத்தும் வியக்க வைக்கும் விதமாக இருந்தது. 


 எனது பங்களிப்பு 

நான் ஆன்லைன் கல்விரேடியோவில் 6ஆம் வகுப்பு மாணவச்செல்வங்களுக்கு ஆங்கில வழியில் சமூக அறிவியல் பாடமும். 7ம் வகுப்பு மாணவச் செல்வங்களுக்கு சொல்வதை எழுதுதல் தமிழ் மற்றும் ஆங்கில பாடத்தில் செயல்பாடுகள் செய்தேன். என் வகுப்பு மாணவிகள் கேட்டு பயன் பெற்றுள்ளனர் என்பதை கொரோனா காலகட்டத்திற்கு பின் பள்ளிகள் திறந்து செயல்பட ஆரம்பித்த பொழுது நான் தெரிந்து கொண்டேன் .



 குழந்தைகள் தின பங்கேற்பு படைப்பாற்றல் வளர்த்தல். 


 குழந்தைகள் தின பங்கேற்பில் என் வகுப்பு மாணவச் செல்வங்களும் பங்கேற்றனர்.

 

 




அவர்களின் படைப்புகள் மிக அருமை, அதிலும் அந்தச் செயல்பாடுகள் மாணவர்களின் எழுத்து, ஓவியம் மற்றும் பல திறமைகளை மேம்படுத்தும் வண்ணமும், போட்டியில் கலந்து பரிசுகளை வெல்ல வேண்டும் என்ற ஆர்வமும் இருந்தது சிறந்த படைப்பகளிகளாக உருவெடுக்கும் வண்ணம் அந்த செயல்பாடுகள் இருந்தன.


 சிறந்த ஆசிரியர்கள் விருது 

 நாம் எவ்வளவு வேலை பார்த்தாலும் நமக்கான அங்கீகாரம் அவ்வப்பொழுது தேவைப்படும் .மரம் வளர உரம் தேவை ,என்பதற்கு ஏற்ப விருது என்பது நமக்கான உரம். அந்த உரம் இடத்தயாராக இருந்தவர்கள் நெல் விளையும் பூமியாக உள்ள நெல்லை மாவட்டத்தில் நம் கல்வி குழு ஆசிரியை திருமதி. சாந்தி அவர்கள். Lion திரு. திரு மலைக்குமரன் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு சிறந்த ஆசிரியர் விருது வழங்க இருப்பதாகவும். அதில் விருப்பம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம் என்றும்  கூறினார். அதில் நானும் கலந்து கொண்டு விருது வாங்கினேன். கரும்பு தின்ன கூலியா? விருதுக்கு ஏற்பாடு செய்த சகோதரி திருமதி. சாந்தி மற்றும் விருது வழங்கிய சகோதரர் திரு. திருமலைகுமரன் அவர்களுக்கும் நன்றி கூற கடமை பட்டுள்ளேன். நாம் எந்த விருதுகளையோ , பாராட்டுகளையோ எதிர் பார்த்து  இக்கல்வி ரேடியோவில் பங்கேற்கவில்லை. அரசு பள்ளி  மாணவர்கள் மட்டும் அல்லாது மற்ற மாணவச்  செல்வங்களும் பயன் பெற அனைவரும் இணைந்தோம். பணியாற்றினோம்.


இந்த வாய்ப்பை நல்கிய அருமைத் தம்பி அவர்களுக்கும் நான் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த குழுவில் என்னை இணைத்து அறிமுகம் செய்த சகோதரி திருமதி. புஷ்பா அவர்களுக்கும் என் நன்றியை தெரிந்துக்கொள்கிறேன்.


 நல் ஆக்கத்திற்கு ஊக்கம் அவசியம். 

மாணவர்களுக்கு செயல்பாடுகள் மூலம் நல்ல ஊக்கமும் மேலும் எங்கும் எப்பொழுதும் தொய்வு இல்லாமல் கல்வி பெற நல்ல பல தரமான வினாக்கள், விடைகள், பயிற்சி என பற்பலசிறப்பம்சங்களை அள்ளி தந்தது நம் கல்வி குழு. இவையனைத்தையும் பார்த்து வியந்தேன்.  எப்பப்பா இவ்வளவும் சாத்தியமா என்று எல்லாம் சாத்தியம் என்று நிரூபித்துக் காட்டினார். நம் நல்லாசிரியர் அருமை தம்பி திரு. கார்த்திக் ராஜா அவர்கள் அவருடைய ஆக்கத்திற்கு நல் ஊக்கமாய் பல ஆசிரிய பெருமக்கள் கைகோர்த்தனர்.


மீண்டுமாய் அனைவருக்கும் நன்றி .

 பெற்றோர்களின் கருத்து குவியல்கள் : 

பெற்றோர்களின் கருத்துக்கள் ஆடியோ மற்றும் வீடியோவாகவும் எமக்கு கிடைத்தன. அக் கருத்துக் குவியல்கள் முத்துக் குவியல்களாக ஜொலித்தன.  வைர கீரிடத்திற்கு முத்துக்களால் மேலும் மெருகூட்டுவதைப் போன்ற வார்த்தை ஜாலங்கள். 

 பயணங்கள் முடிவதில்லை 

 சிறிதளவில் தொடங்கப்பட்ட இந்த இணையவழி பயணம் மேலும் சிறப்புடனும் ஒளிர மிளிர என்னால் முடிந்த வழிகளில் உதவி செய்ய கடமை பட்டுள்ளேன்.

இப்பயணம் மேலும் மேலும்  சிறப்புடன் வெற்றி பெற வாழ்த்துகிறேன். 

                           நன்றி! வணக்கம். 

                                

                         இப்படிக்கு, 

                    மு. ஷகிலா சலாமத்

                   அரசு(ம)மே.நி.பள்ளி

                        கோவில்பட்டி. 

                     தூத்துக்குடி மாவட்டம்.

No comments:

Post a Comment